2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன் 


சிறுவர்கள் உளமகிழ்வான சுற்றாடலில் வாழ்வதன் அவசியம் பற்றிய செயலமர்வு ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வாநகர் பகுதியில் வியாழக்கிழமை (16) நடைபெற்றது.

வேள்ட்விசன் நிறுவன நிதி அனுசரணையில் நடைபெற்ற இச்செயலமர்வுக்கு வேள்ட்விசன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.அஞ்சலிற்றோ தலைமை தாங்கினார்.

இச்செயலமர்வில் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் மாவட்ட அதிகாரி இராஜரட்ணம் செந்தூரன், கிளிநொச்சி மாவட்ட உளவளதுணை அதிகாரி தேவராஜா துஸ்யந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் செல்வாநகர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் 45 பேர் பங்குபற்றினார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .