2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பட்டப்பகலில் வீட்டுக் கூரை பிரித்து நகைகள் கொள்ளை

Kanagaraj   / 2014 ஜனவரி 17 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் சோமரந் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று வீட்டின் கூரையினைப் பிரித்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 8 லட்சம் ரூபா பெறுமதியுடைய 16 பவுண் தங்கநகைகளைத் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலிருந்த கணவன், மனைவி இருவரும் நிகழ்வொன்றிற்கு செல்வதற்காக வீட்டினைப் பூட்டிவிட்டுச் சென்ற வேளை வீட்டின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்நுழைந்த திருடர்கள் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிக்கொண்டு முன்பக்க கதவு வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதினையும், தொடர்ந்து கூரையின் ஓடுகள் விலக்கப்பட்டு வீட்டின் அலுமாரியிலிருந்த தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதையும் அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .