2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வைத்தியசாலை பணியாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பணியாளர்கள் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுடனான மனிதநேயத்துடனான அணுகுமுறையினை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் இன்று (18) இடம்பெற்ற வைத்தியசாலை தொழிற்சங்கத்துடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இங்கு கடமையாற்றும் அனைவரும் நிரந்தர சேவையின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் கடமையுணர்வுடனும், விஸ்வாசத்துடனும் பணிசெய்ய வேண்டும். 

அத்துடன், மேலதிகாரிகளுக்கு கீழ்ப் பணிந்து நடந்து கொள்ளும் அதேவேளை, இங்கு வரும் நோயாளர்கள் தமது நோய்களின் நிமித்தமாக உங்களுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும் பட்சத்தில் அவற்றை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்களுடனான உங்களது அணுகுமுறைகள் மனிதநேயத்துடன் அமையப் பெற வேண்டும். 

அதுமட்டுமல்லாது நோயாளர்கள் ஒவ்வொருவரும் திருப்திபடும் வகையில் உங்களது சேவைகள் அமையப் பெறுவதுடன், ஒருவரையொருவர் மதிக்கும் பண்பையும் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

தொழிற்சங்கத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காணும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .