2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.

இந்திய புதுக்கோட்டை மாவட்டம் ஜனதாப்பட்டினம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வந்த 26 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று (21) கைதுசெய்யப்படனர்.

கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், ஊர்காவற்துறை நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு (21) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், குறித்த மீனவர்களின் 6 படகுகளையும் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .