2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாதகலிலுள்ள ஞானவைரவர் கோவிலில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாதகல் கிழக்கிலுள்ள ஞானவைரவர் கோவிலில் 23,000 ரூபா பெறுமதியான 04 திரிசூலங்கள் கொள்ளையிடப்பட்டதென்று கோவில் குருக்கள் நா.கணேஸ்சர்மா இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக  யாழ். இளவாலை பொலிஸார்  தெரிவித்தனர்.

கோவிலின் முன்கதவு உடைக்கப்பட்டு  செப்பிலான 04 திரிசூலங்கள் கொள்ளையிடப்பட்டதென்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .