2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பால்நிலைசமத்துவத்தின் திறன்விருத்தி தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

சர்வதேச கெயார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பால்நிலைசமத்துவத்தின் திறன்விருத்தி தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

கெயார் சர்வதேச நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.நிர்மலநாதனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளராக சர்வதேச கெயார்; நிறுவனத்தின் அதிகாரி கே.வீரசிங்கம் கலந்துகொண்டார்.

இச்செயலமர்வில் சமூகத்தில் பால்நிலை சமத்துவம் பேணப்படுவதன் அவசியம், அபிவிருத்தியில் பால்நிலை சமத்துவத்தின் வகிபாகம் என்பன குறித்து ஆராயப்பட்டன.

கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ச.பி.அமலராசா, கரைச்சி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 40 பேர்இச்செயலமர்வில்  கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .