2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு, உளசமூகம் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு, உளசமூகம் தொடர்பான செயலமர்வு கரைச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள யூனியன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது.

வேள்ட்விசன் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட திட்ட இணைப்பாளர் எஸ்.அஞ்சலிற்றோ தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்விற்கு வேள்ட் விசன் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உளவள அதிகாரி தேவராஜா துஷ்யந்தன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி இராஜரட்ணம் செந்தூரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர் பாதுகாப்பு, உளசமூகப் பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை வழங்கினார்கள்.

கிளிநொச்சி கோணாவில், யூனியன்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 60 பேர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .