2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழ். வேலணை துறையூர் சந்தைக் கட்டிடத் தொகுதி திறப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 
உலக வங்கியின் 06 மில்லியன் ரூபா செலவில் வேலணை பிரதேச சபையின் புறநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட யாழ். வேலணை துறையூர் சந்தைக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா இன்று (31) நடைபெற்றது.
 
வேலணை பிரதேச சபைத்தலைவர் சி.சிவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இக்கட்டித்தொகுதியினை திறந்துவைத்தார்.
 
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வேலணை பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி, யாழ். மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் உதவிப் பணிப்பாளர் என்.கணேஸமூர்த்தி, மீனவர் சங்கத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
கடற்றொழிலை ஜீவனோபாய தொழிலாகச் செய்துவருகின்ற இப்பகுதி மக்களுக்கு நிரந்தரக்கட்டிடம் இன்மையால் வேலணை துறையூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கமைய இக்கட்டிடம் வேலணை பிரதேச சபையினால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .