2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நிஷா தேசாய் பிஸ்வால் - சந்திரசிறி சந்திப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள  தெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறியை வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1.30 சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசனும் உடனிருந்தார்.

இச்சந்திப்பின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக ஆளுநர் அலவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  பிஸ்வால், யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், யாழ்.சிவில் சமூகம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரினைச் சந்தித்ததுடன், யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .