2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை பிரச்சினைகளுக்கு அமைச்சரவைப் பத்திரம் ஊடாக உரிய நடவடிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் தொழிற்துறை முதலீட்டாளர்கள் நில வாடகை தொடர்பில் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளுக்கு தீர்வு காணுமுகமாக அமைச்சரவைப் பத்திரம் ஊடாக உரிய தீர்வினை காண்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்' என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை (3) உறுதியளித்தார்;.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது முதலீட்டாளர்களுக்கும் தொழிற்துறைசார்ந்தவர்களுக்கும் கிடைக்கப் பெறக்கூடிய நன்மைகள் மற்றும் இலாபங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

முதலீட்டாளர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர், அவற்றுக்கான தீர்வினை துறைசார்ந்தோர் ஊடாக பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேபோன்று கைத்தொழிற்பேட்டை இயங்கும் பட்சத்தில் சுற்றுசூழல் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படும் அதேவேளை, துறைசார்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்துறை முதலீட்டாளர்களுக்கு முப்பது வருட காலத்திற்கு கைத்தொழில் பேட்டை வளாகத்தில் குறித்த நிலத்திற்கான வாடகை அறவிடப்படவுள்ளது.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அயராத முயற்சியின் காரணமாக மீளவும் புதுப்பொலிவுடன் இயங்கவுள்ள நிலையில் 65 ஏக்கர் கொண்;ட நிலப்பகுதியில் தற்போது 25 ஏக்கரில் முதலாம் கட்டத்திற்கான உட்கட்டுமானப் பணிகள் இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இக்கலந்துரையாடலின் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர் நவாப் ரஜாப்தீன், பொதுமுகாமையாளர் ரட்ன மலலா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.\



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .