2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுதந்திரதினத்தன்று மதுபானம் விற்றவர் பொலிஸ் பிணையில் விடுதலை

Kogilavani   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுதந்திரதினத்தன்று மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க புதன்கிழமை (05) தெரிவித்தார்.

இவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். புத்தூர் கிழக்கு கலைமதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்தபோது மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது அந்நபரிடமிருந்து 34 அரச மதுபானப் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .