2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும் இருந்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வியாழக்கிழமையும் குறித்த தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்புக்கள் வந்ததாகவும் எனினும் அதற்கு தான் பதிலளிக்கவில்லை என்றம் அந்த முறைப்பாட்டில் சத்தியசீலன் தெரிவித்திருந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .