2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இளைஞனைக் காணவில்லையென முறைப்பாடு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி விடான்ஸ் வீதியினைச் சேர்ந்த சண்முகநாதன் சுரேஸன் (36) என்ற இளைஞனைக் கடந்த புதன்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது தந்தையினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 7 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் மேற்படி நபர் கடந்த 5 ஆம் திகதி யாழிலிருந்து வவுனியாவிற்குச் சென்றதாகவும், அன்றைய தினம் வவுனியாவிலிருந்து தொலைபேசியில் தன்னுடன் உரையாடியதாகவும் அதன் பின்னர் அவர் தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லையெனவும் இதுவரையிலும் வீடு திரும்பவும் இல்லையெனத் அவரது தந்தை செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .