2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குளிர்பானம் திருடியோர் சிக்கினர்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

நவநாகரீகமான முறையில் வியாபார நிலையமொன்றில் பொருட்கள் வாங்க வந்த இரண்டு பெண்கள் அங்கிருந்த இரண்டு குளிர்பானப் போத்தல்களைத் திருடி அகப்பட்டுக் கொண்ட சம்பவமொன்று தெல்லிப்பளையில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
 
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வியாபார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருபெண்கள் வியாபார நிலைய உரிமையாளரிடம் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பெண்கள் கேட்ட பொருள் ஒன்றினை எடுப்பதற்காக வியாபார நிலைய உரிமையாளர் நிலையத்தின் பின்பக்கம் சென்றவேளை, குறிப்பிட்ட இருபெண்களும் கடையின் முன்னால் இருந்த இரண்டு பெரிய குளிர்பானப் போத்தல்களை திருடி மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழுள்ள பொருள் வைக்கும் இடத்தில் வைத்துள்ளனர்.

இதனை தூரத்தே நின்று அவதானித்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் உடனடியாக ஓடி வந்து உரிமையாளரிடம் இது பற்றித் தெரிவித்துள்ளனர். உரிமையாளர் குறிப்பிட்ட பெண்களின் மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழு;ப்பகுதியினைச் சோதனை செய்து பார்த்த போது 2 குளிர்பானப் போத்தல்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.

தொடர்ந்து உரிமையாளர், இருவரும் பெண்கள் என்ற காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல் கடுமையான எச்சரிக்கை செய்து அவர்களை செல்ல அனுமதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .