2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபட்ட எழுவர் கைது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (15) இரவு மட்டும் வௌ;வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட 7பேரை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார்.

நீர்வேலி, கரந்தன்,  கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 5பேரும், கோப்பாய் பகுதியிலுள்ள வீதியில் மதுபானம் அருந்தி விட்டு போக்குவரத்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 2பேரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

இவர்களை நாளைய தினம் (17) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .