2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களால் எரியூட்டப்பட்டது

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

யாழ்.குருநகர் 5 மாடிக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை (26) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழிலுக்கு செல்வதற்காக நண்பர் ஒருவரின் வீட்டில் நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளினை விட்டுச் சென்ற மீனவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .