2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கருத்தாடல் நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


.நா.நவரத்தினராசா, எஸ்.குகன்


'அன்னையர் விருப்பம்' என்ற செயற்திட்டத்தினூடாக இனங்களுக்கிடையில் நட்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் சிங்கள  பாடசாலை மாணவர்களுக்கிடையிலான செயற்திட்ட நிகழ்வின் அங்கமாக கொழும்பு ஆனந்தாக கல்லூரி மாணவர்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் இடையிலான கருத்தாடல் நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்த அன்னையர் செயற்றிட்ட இணைப்பாளர் சமந்த வன்னியராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,

'இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் நிதி அனுசரனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்றிட்டத்தினூடாக, சிங்கள மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியினையும் தமிழ் மாணவர்கள் மத்தியில் சிங்கள மொழியினையும் கற்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்மூலம் இனங்களுக்கிடையில் நட்புணர்வினை ஏற்;படுத்துவதன் ஊடாக தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்த்து எதிர்காலத்தில் நட்புணர்வுடன் கூடிய சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும்.

எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கக் கூடியவர்கள் மாணவ சமுதாயத்தினர். இளம் மாணவ சமூதாயத்தினரிடையே நட்புணர்வையும் புரிந்துணர்வையும் ஒற்றுமை உணர்வினையும் ஏற்படுத்துவதன் ஊடாக மாணவர்களுக்கிடையே கருத்துக்கள் பகிரப்படுகின்ற பொமுது புரிந்துணர்வுடன் கூடிய  இன நட்புணர்வு மிக்க சமுதாயம் ஒன்று உருவாக்கப்படும்.

இந்தச் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வாகவே இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

தொடர்ந்து இந்தச் செயற்றிட்டம், யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை - கொழும்;பு கோட்டை ஆனந்த பாலிக்கா பெண்கள் பாடசாலை, வவுனியா மத்திய மகா வித்தியாலயம் - கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம், மன்னார் சென்.சேவியர் கல்லூரி - நுகேகொட சமுத்திரா தேவி வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தரப் பாடசாலை - பத்தரமுல்லை சகுதி தேசியப் பாடசாலை ஆகிய 10 பாடசாலை மாணவர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கு நடைபெறும் கருத்தாடல் நிகழ்வின் கருத்தாலிடனூடாக இரு கல்லூரி மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கி தமிழ் சிங்கள சஞ்;சிகைகளும் எதிர்காலத்தில் வெளியிடப்பட்டவுள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஊடக இணைப்பாளர் சாமந்தா சமரக்கோன் யாழ்ப்பாணம் மத்திய கல்லாரியின் ஊடக இணைப்பாளர் எஸ்.ரி.குமரன்  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .