2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாகனம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினராசா  

யாழ்.ஏழாலை வடக்கில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு (28) தாக்குதலை மேற்கொண்டதுடன்  இதனால் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (01) தெரிவித்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுசென்று விடும் வாகனம் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 பேர் கொண்ட கொண்ட குழுவொன்று கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கி வாகனத்தினை சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையிலும் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .