2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருட்டுப்பொருட்களுடன் சென்ற இருவருக்கும் விளக்கமறியல்

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அராலிப் பகுதியில் துவிச்சக்கர வண்டிகளில் திருட்டுப் பொருட்களுடன் சென்ற இருவருக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷிர் மொஹமட் இன்று (03) உத்தரவிட்டார்.

குறித்த நபர்களை இன்று (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

துவிச்சக்கர வண்டிகளில் திருட்டுப்பொருட்களுடன் சென்ற இருவரை நேற்று (02) கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்த 4 மின்மோட்டார்கள் மற்றும் பித்தளை குத்துவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர்கள் திருட்டுப் பொருட்களைக் கொண்டு செல்கின்றனர் என வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்களினைக் கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .