2025 ஜூன் 28, சனிக்கிழமை

நடராஜர் சிலை திருட்டு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தெல்லிப்பழையின் பன்னாலையிலுள்ள வைரவர் கோவிலிலிருந்த  20,000 ரூபா பெறுமதியான நடராஜப்பெருமான் சிலை திருட்டுப் போயுள்ளதென்று இக்கோவில் பூசகர் மகேஸ் சர்மா மகேந்திரன் என்பவர் ஞாயிற்றுக்கிழமை  (23) முறைப்பாடு செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை கோவிலுக்குச்  சென்றபோது, கோவிலின்; முன்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த நடராஜப்பெருமானின் சிலையை திருடிச் சென்றுள்ளதாக இம்முறைப்பாட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .