2025 ஜூன் 28, சனிக்கிழமை

உள்ளூர் கைப்பணியை மேம்படுத்தவேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ளூர் கைப்பணி மற்றும் கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதன் ஊடாகவே சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (24) இடம்பெற்ற வடமாகாண கைப்பணி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு வளங்கள் இருக்கின்ற போதிலும் அவை சரியாகப் பயன்படுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் பனை, தோல், பன்புல், மட்பாண்டம், மரம் உள்ளிட்ட வளங்களின் ஊடாகக் கிடைக்கப் பெறுகின்ற மூலப்பொருட்களைக் கொண்டு பல்வேறு விதமான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்திகளை துறைசார்ந்தவர்கள் முன்னெடுக்கும் போது அவர்களது தனிநபர் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும்.

அந்த வகையில்,  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்கள் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்தும் வகையில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உள்ளூர் கைத்தொழில் மற்றும் கைப்பணி தொழிற்துறைகளை துறைசார்ந்தோர் ஊடாக ஊக்கப்படுத்தி செயற்படுத்தும் போது அவற்றினூடாக அவர்கள் சார்ந்த வாழும் சமூகத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .