2025 ஜூன் 28, சனிக்கிழமை

கைத்தொழிற்துறைகளை முன்னேற்ற பொறுப்புணர்வு தேவை: டக்ளஸ்

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்தி முன்னேற்றுவதற்கு துறைசார்ந்தவர்கள் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களினால் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'எமது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு சபை மற்றும் வடகடல் நிறுவனம் ஆகிய நிறுவனங்களினால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வடமாகாணத்திலும் குறித்த நிறுவனங்களினூடாக பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். 

இவ்வாறான வேலைத்திட்டங்கள் அமைச்சின் கொள்கைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் அதேவேளை, சமூக அக்கறையுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், தொழிற்துறைசார்ந்த பயிற்சிகளை நிறைவு செய்த தொழில் முயற்சியாளர்களுடன் குறித்த நிறுவனங்களினது பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி மாவட்டங்களினது இணைப்பாளர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே தொழிற்துறைகளை முன்னேற்றம் காணச் செய்ய முடியும்' என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் குறித்த நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, துறைசார்ந்த உத்தியோகத்தர்களுடனும் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், தொழில் முயற்சியாளர்கள் தொழிற்துறை நடவடிக்கைகளில் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள்; தொடர்பில் குறிப்பாக மூலப்பொருட்கள், உற்பத்தி, சந்தைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்திய அமைச்சர் குறித்த தொழிற்துறைகளை மேம்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதனிடையே, தேசிய வடிவமைப்பு சபையின் ஊடாக வடமாகாணத்தின் சிறிய, மற்றும் கைத்தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் நவீன வடிவமைப்புடன் கூடியதாக உற்பத்திகளை முன்னெடுக்க தாம் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளதாக சபையின் பணிப்பாளர் ரட்ண மழல தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .