2025 ஜூன் 28, சனிக்கிழமை

உபகரணங்கள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சருக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து விளையாட்டுக்கழகங்கள் மற்றும் சங்கம் ஆகியவற்றிற்கு 250,000 ரூபா பெறுமதியான கணினிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் வியாழக்கிழமை(3) இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கணினிகளையும், உபகரணங்களையும் வழங்கிவைத்தோடு, சோளந்தோட்ட இளைஞர் கழகத்துக்கு 50000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், கோண்டாவில் வாகீஸ்வரி கல்வி வளர்ச்சிக் கழகம் மற்றும் ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயச் சங்கம் ஆகியவற்றிற்கு 10,0000 ரூபா பெறுமதியுடைய ஒவ்வொரு கணினிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இமானுவேல் ஆர்னல்ட், சந்திரலிங்கம் சுகிர்தன், கழகங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .