2025 ஜூன் 28, சனிக்கிழமை

வீட்டின் கூரையை பிரித்துத் திருட்டு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி
சித்தங்கேணியிலுள்ள வீடொன்றின் கூரையை வியாழக்கிழமை (03) மதியம் பிரிக்கப்பட்டு அங்கிருந்த 4 பவுண் நகைகள், 40 ஸ்ரேலிங்க பவுண், மற்றும் இலங்கை ரூபா 5000 உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்தனர்.

மேற்படி வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதினால், வீட்டினைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதன்போது, வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மேற்படி பொருட்களைத் திருடியுள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கணினியினை வீட்டின் பின்புறத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .