2025 ஜூன் 28, சனிக்கிழமை

பிரதேச நீர்நிலைகளை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

 எமது பிரதேசத்திலுள்ள குளங்களை பாதுகாத்து வந்தால், நீர்ப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என வலி மேற்கு (சங்கானை) பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் வலி.மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற சர்வதேச நீர் தின நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை (08)தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வலி. மேற்கு பிரதேசத்திற்கு வேள்ட் விசன் நிறுவனத்தினரால் 17,000 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு குடிநீர் வழங்க முன்வந்த வேள்ட் விசன் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது பிரதேசங்களில் இருக்கும் நீர்நிலைகளை உரிய முறையில் பாதுகாப்பதன் மூலம் சுத்தமான நீரினை பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், பொன்னாலை பிரதேசத்தில் உள்ள குளத்தினை புனரமைப்பு செய்து மழை நீரை சேமித்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும்  தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .