2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் வீதியில் புதன்கிழமை  காலை (9) மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாமயடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்விபத்தில், சுன்னாகம் மின்சார நிலைய வீதியை சேர்ந்த இரத்தினம் சிவரூபன் (35) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும், பெரிய பண்டிவிரிச்சான் மடுவினைச் சேர்ந்த இம்மானுவேல் குணசிங்கம் (52) யாழ்.போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குணசிங்கம் என்பவர் சில்லாலையிலிருந்து உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சுன்னாகம் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் புன்னாலைகட்டுவன் வீதி மின்சார நிலையச் சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் குணசிங்கமும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட  மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்த மற்றைய நபர் மோட்டார் சைக்கிளையும் எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளார்.  

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .