2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். நுணாவில் பகுதியில் முச்சக்கரவண்டியும், கன்டர் ரக வாகனமும் இன்று ஞாயிற்றுக்கிழமை(03) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கனகலிங்கம் துஸியந்தன் (31) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இவர் மிருசுவலினைச் சேர்ந்தவராவார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்ததுடுன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X