2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தொலைபேசித் திருடர்கள் கைது

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

யாழ்.அனலைதீவு 2 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றிலிருந்த இரண்டு கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் வேலணையினைச் சேர்ந்த நால்வர் கைது நேற்று சனிக்கிழமை (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலிருந்த 25 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள் வெள்ளிக்கிழமை (09) இரவு திருடப்பட்டிருந்தது.

தொடர்ந்து இது தொடர்பாக உரிமையாளரினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வேலணையினைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X