2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பசுவை வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். உடுப்பிட்டி பகுதியில் பசுமாடொன்றை இறைச்சிக்கு வெட்டிய  குற்றச்சாட்டின் பேரில்  இருவரை  நேற்று வியாழக்கிழமை  கைதுசெய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்குச் சென்று உடுப்பிட்டியைச்  சேர்ந்த சுப்பிரமணியம் சதீஸ்குமார் (வயது 23), ஜெனடிக் ஜெசுதாஸ் (வயது 19) ஆகியோரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விருவரையும்  பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்வதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X