2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை தயாரித்தல்

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.விஜயவாசகன்


சாவகச்சேரி நகராட்சி மன்றம், ஏசியா பவுண்டேஸன் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம் இணைந்து நடத்திய இலத்திரனியல் முறையில் குடிமக்கள் அறிக்கை அட்டை தயாரித்தல் தொடர்பான விளக்கவுரை நகராட்சி மண்டபத்தில் சனிக்கிழமை (24) இடம்பெற்றது.

இதன்போது, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கையடக்க இலத்திரனியல் பதிவு இயந்திரம் வழங்கப்பட்டு அது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இதன்படி, உத்தியோகத்தர்கள் கிராமஅலுவலர் பிரிவு ரீதியாக மக்களிடம் நேரடியாகச் சென்று, நகர சபையினால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வீதி திருத்தம், நீர் விநியோகம், மின்சார வசதி, தெருவிளக்குகள் பொருத்துதல், கழிவகற்றல் உள்ளிட்ட விடயங்கள் மக்களுக்கு திருப்தியாகவுள்ளதா என்று கருத்துக்களை உள்வாங்குவார்கள்.

உள்வாங்கப்படும் கருத்துக்கள் அவர்களின் கையடக்க இலத்திரனியல் இயந்திரத்தில் உடனடியாகப் பதியப்பட்டு நேரடியாக உள்ளுராட்சித் திணைக்களங்களுக்கு அனுப்பப்படும்.

இதுவரைகாலமும் புத்தகப் பதிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பதிவுகள்  தற்போது இலத்திரனியல் முறை மூலம் மேற்கொள்வதற்கு ஏசியா பவுண்டேஸன் நிறுவனம் உதவியுள்ளதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மரியதாஸன் ஜெகூ தெரிவித்தார்.

இதன்படி சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இந்நடவடிக்கை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவை நகராட்சி மன்றங்களின் எதிர்கால அபிவிருத்திக்கு உதவுவதுடன், இந்த இலத்திரனியல் முறை பல்வேறுபட்ட நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X