2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

Kanagaraj   / 2014 மே 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆவரங்கால் சிவன் கோயிலின் கதவை உடைத்து சனிக்கிழமை (24) அங்கிருந்த பொருட்களைத் திருடிய நபரை மோப்பநாயின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர், ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸாரை கண்டு கொள்ளையிட்ட பொருட்களை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதன்போது, ஆலயத்திலிருந்து திருடப்பட்ட டி.வி.டி பிளேயர், எம்ப் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துவிச்கக்கரவண்டியையும் அதனுள் இருந்த காற்சட்டையொன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மோப்பநாயின் உதவியுடன் ஆலயத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வசிக்கும் 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஏற்கெனவே சிறு திருட்டுக்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .