2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புகைத்தல் எதிர்ப்பு தினம் தொடர்பில் விளக்கமளிப்பு

Kanagaraj   / 2014 மே 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
 
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 31ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ள புகைத்தல் எதிர்ப்புத் தினம் தொடர்பாக, சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வினை தென்மராட்சி பிரதேச செயலக சமூர்த்தி வாழ்வெழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

உதவிப் பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அடிஸ் நிறுவன யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோடீஸ் கருத்துரைகளை வழங்கினார்.
 
இதன்போது, பொதுமக்களிடம் புகைப்பழக்கத்தை கைவிடுதல் தொடர்பாக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எவ்வாறு எடுத்துக்கூறவேண்டும் என்பது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் சமூர்த்தி மகாசங்க நிறைவேற்று உறுப்பினர்கள், சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள்;, மதகுருமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X