2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விதிமுறைகளை மீறியவர்களுக்கு தண்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 11 பேருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று (03) 99 ஆயிரத்து 500 ரூபா  தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இல்லாமல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, வீதி ஒழுங்கை மீறியமை உள்ளிட்டவை தொடர்பாக மேற்படி 11 பேரும் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து மேற்படி 11 பேருக்கும் எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று (03) வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த 11 பேரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து 19500 ரூபா, 19000 ரூபா, 14500 ரூபா, 8000 ரூபா, 5500 ரூபா என்ற ரீதியில் 5 பேருக்கும் இருவருக்கு தலா 10500 ரூபாவும், நால்வருக்கு தலா 3000 ரூபா வீதமும் தண்டம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X