2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருட்டை கட்டுப்படுத்த விழிப்புணர்வு

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன், கி.பகவான்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெறுகின்ற திருட்டுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரசார நிகழ்வொன்றினை நேற்று சனிக்கிழமை (07) நடத்தப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை, மட்டுவில், கைதடி, நுணாவில் மற்றும் மீசாலை ஆகிய இடங்களில் இந்தப் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதன்போது, ஒலிபெருக்கி மூலம், 'வீட்டு அலுமாரிகளைப் பாதுகாப்பாகப் பூட்டி வையுங்கள்', 'தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவேண்டாம்', 'பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்தல்' உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்கள்.

பிரதேசத்தில் இடம்பெறுகின்ற திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தின் போது, திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றால் உடன் பொலிஸாரிற்குத் தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X