2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குரங்கு பாய்ந்ததால் ஆசிரியை படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். மண்டுவில் சோலையம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மீது குரங்கு பாய்ந்ததால், குறித்த ஆசிரியை நிலைகுலைந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (09) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீசாலை மேற்கைச் சேர்ந்த ஈழநேசன் புனிதகுமாரி (வயது 52) என்ற ஆசிரியையே இவ்வாறு படுகாயமடைந்தார்.

கீழே வீழ்ந்ததால் இவரது ஒரு கை முறிந்துள்ளது.

இதேவேளை சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும்; நேருக்குநேர் மோதியதால் இயற்றாலையைச் சேர்ந்த சின்னத்துரை தெய்வேந்திரம் (வயது 62) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (09) அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .