2025 ஜூலை 05, சனிக்கிழமை

வர்த்தகர்களுக்குத் தண்டம் விதிப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தின் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களுக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 16 வர்த்தகர்களுக்கு 52,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர்.

பாவனையாளர்கள் அதிகார சபை அதிகாரிகளினால், இம்மாதம் 1ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாமை மற்றும் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்தமை போன்ற குற்றங்கள் தொடர்பாக 16 வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பிடிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக அந்தந்த நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டமையால், நீதிமன்றங்களினால் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .