2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுவதியை காணவில்லையென முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியை கடந்த செவ்வாய்க்கிழமை (15) தொடக்கம் காணவில்லையென யுவதியின் தாயாரினால் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மேற்படி யுவதி, இன்னமும் வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் கூறினார்கள்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .