2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொல்லங்கலட்டி முன்பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஜூலை 19 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலி. வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலய முன்பள்ளி மாணவர்களுக்கு வலி. வடக்குப் பிரதேச சபையினால் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சாரிகளும் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி உதவிப் பொருட்களை வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் பாடசாலை முன்பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார்.

போரால் பாதிக்கப்பட்ட மேற்படி பாடசாலையின், முன்பள்ளிக் கற்றல் செயற்பாடுகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .