2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தாயை தாக்கிய மகன்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தாயை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞனை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கும்படியும், 13 வயது மகனை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்கும்படியும் யாழ். சிறுவர், பெண்கள் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி சனிக்கிழமை (02) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம்இ கரணவாய் மேற்கு, மண்டான் பகுதியைச் சேர்ந்த ஜெயராசா கிருஸ்ணபவானி (வயது 40) என்பவர் தனது மகன்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி படுகாயமடைமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (01) இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார், தாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவரது இரு மகன்களையும் நேற்று சனிக்கிழமை (02) கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், 21 வயது மகன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தாயைத் தாக்கிய போது, கூடவே 13 வயதுச் சிறுவனும் தாயைத் தாக்கியதாகத் தெரியவந்தது.

தொடர்ந்து, மேற்படி இருவரும் யாழ்.சிறுவர், பெண்கள் நீதவான் நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் நேற்று சனிக்கிழமை (02) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .