2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது கல்வீச்சு

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

யாழ். கெருடாவில் ஞானவைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியில் எம்.சிவஞானம் (வயது 40) என்ற பாடகர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தனர்.

கல்வீச்சில் காயமடைந்த பாடகர் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் கொண்ட கும்பலினராலேயே இந்தக் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் ஒலி பெருக்கி சாதனங்கள் சிலவும் சேதமடைந்ததாகவும், இதனையடுத்து இசை நிகழ்;ச்சி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .