2025 ஜூலை 09, புதன்கிழமை

கூட்டுறவு விற்பனை நிலையத்தில் திருட்டு

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு விற்பனை நிலையத்தின் கதவு சனிக்கிழமை (23) இரவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தனர்.

தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான மேற்படி கூட்டுறவு விற்பனை நிலையத்தில் இருந்த, அரிசி, பால்மா பெட்டிகள், சோடா, சவர்க்கார வகைகள் உள்ளிட்டவையே திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கூட்டுறவு விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஞாயிற்றுக்கிழமை (24) செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .