2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். வியாபார நிலையங்களுக்கு அபராதம் விதிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

சட்டத்துக்கு முரணான விதத்தில் செயற்பட்டமைக்காக யாழ். மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் 46 வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு 2 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

பாவனையாளர்கள் அதிகாரசபை அதிகாரிகளால், யாழ். மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்கள் கடந்த நவம்பர் மாதம் சோதனையிடப்பட்ட போது, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட 46 குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேசங்களிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .