2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மரண கிடங்கு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.நாவலர் வீதியில் புகையிரதக் கடவையின் அருகிலுள்ள பாரிய பள்ளத்துக்குள் நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

புகையிரதப் பாதையின் கீழாக வாய்க்கால் அமைக்கும் பொருட்டு பாரிய பள்ளம் தோண்டப்பட்டது. புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்படவில்லை. இதனால் வீதியின் அருகில் பாரிய பள்ளம் ஏற்பட்டது.

இதனால் அதன் அருகில் செல்லும் வாகனங்கள் சறுக்கி பள்ளத்துக்குள் வீழ்கின்றன. துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் செல்பவர்கள் அடிக்கடி வீழ்வதுடன், சில வேளைகளில் பெரிய வாகனங்களும் வீழ்ந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .