Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர், சனிக்கிழமை (25) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் வீட்டுக்கு அயல் வீட்டிக்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை துரத்திச் சென்ற போது, அந்தக் கும்பல் இவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
59 minute ago
1 hours ago