2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட மேற்படி  நீதவான், மீனவர்களை விடுதலை செய்துள்ளார்.

நாகபட்டினம், அக்கரைபேட்டை பகுதியை சேர்ந்த இந்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர்,  5 விசைப்படகுகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்த மீனவர்கள் நீரியல் வளத்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .