2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருவிழாவில் சங்கிலி அறுத்த ஐந்து பெண்கள் கைது

Menaka Mookandi   / 2015 மே 22 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா வியாழக்கிழமை (21) நடைபெற்ற போது, பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட பெண் உட்பட அவருடன் இணைந்து வந்திருந்த மேலும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களும் கிளிநொச்சி உடையார்கட்டைச் சேர்ந்தவர்கள்.
சனநெரிசலில் பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட பிறிதொரு பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

இதனைக் கண்டதும் அவருக்கு அருகில் நின்றிருந்த மேலம் 4 பெண்கள் தப்பித்து ஓட முயன்றுள்ளனர். அவர்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அனைவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


You May Also Like

  Comments - 0

  • dhammi Friday, 22 May 2015 01:28 PM

    their not women some times their in a big problem but for others pls why you all wearing gold pleas wear covering

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .