2025 ஜூலை 05, சனிக்கிழமை

கலகத்தில் ஈடுபட்டதாலேயே இந்திய சுற்றுலாப் பயணி கைதுசெய்யப்பட்டார்

George   / 2015 மே 29 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 130 பேரில் உள்ளடங்கும் இந்திய சுற்றுலா பயணியும் கலகத்தில் ஈடுபட்டதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
கடந்த 20ஆம் திகதி யாழ். நீதிமன்றத்துக்கு முன்பாக கூடியவர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு கற்கள் வீசி, வாகனங்களையும் உடைத்தனர். அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுவீசி கலகத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருந்தனர்.
 
கலகத்தில் ஈடுபடாத மாணவர்கள், அப்பாவிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,
 
கைது செய்யப்பட்ட 130 பேரும் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே என பொலிஸார் கூறுகின்றனர். கைதுக்கு உள்ளானவர்கள் அப்பாவிகள் என்கின்றனர். இதற்கான தீர்ப்பை நீதிமன்றமே வழங்கவேண்டும். பாடசாலை சீருடையுடன் அங்கு எவரும் கைது செய்யப்படவில்லை. குழப்பத்தில் ஈடுபடாத எவரையும் கைது செய்யவில்லை என்றார்.
 
இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டவர்களில் இந்திய சுற்றுலாப்பயணியும் உள்ளதாக இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரும் கலகம் விளைவித்தவரா? எனக் கேட்டபோது,
 
இந்திய சுற்றுலாப் பயணியும் கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டார் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .