Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 03 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 43 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே.கஜநிதிபாலன், புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.
யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ்.நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை (01) இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 45 பேரும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஒரு பிரிவான 43 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துமீறி உள்நுழைந்து நீதிமன்றத்தை தாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூட்டி வாகனங்களை உடைத்தமை, சட்டவிரோத கூட்டம் கூட்டி கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை காயப்படுத்தியமை ஆகிய 3 வழக்குகள் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அத்துமீறி உள்நுழைந்து நீதிமன்றத்தை தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் தலைமையிலான 15 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.
அதேநேரத்தில் சந்தேகநபர்கள் சிலர் சார்பாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு.சிற்றம்பலம் உள்ளடங்கலாக சட்டத்தரணிகள் சிலர் ஆஜராகினர்.
கைது செய்யப்பட்டவர்களிலுள்ள மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரப்பட்ட நிலையில், பிணை மனுக்கான கட்டளை திகதிகளை நீதவான் வழங்கினார். இந்த 43 பேர் பிரிவிலேயே இந்திய சுற்றுலாப் பிரஜையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago