Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
புத்தூர், கலைமதி பகுதியில் 10 மதுபான போத்தல்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒருவரை வெள்ளிக்கிழமை (10) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார், சனிக்கிழமை (11) தெரிவித்தனர்.
மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் வெள்ளிக்கிழமை (10) முதல் 3 தினங்கள் மூடப்பட வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சந்தேக நபர் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் மதுபான போத்தல்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த வீட்டுக்குச் சென்ற இரகசிய பொலிஸார், சந்தேகநபரிடம் சாரயம் கொள்வனவு செய்வது போல பாவனை செய்து வாங்க முற்பட்டுள்ளனர்.
இதன் போது சந்தேக நபர் அதிக விலைக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார். உடனடியாக சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 10 மதுபான போத்தல்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
23 minute ago