2025 ஜூன் 26, வியாழக்கிழமை

46 கசிப்பு போத்தல்களுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 ஜூலை 12 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் இரகசிய பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவரை சனிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வீ.எல்.துஷ்மந்த தெரிவித்தார்.

இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார், 46 கசிப்பு போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்த மேலதிக விசாரணைனகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .